இஸ்லாம்-உயிர்களின் முக்கியத்துவம்

நான் முன்பு கூறியிருந்ததைப் போலவே, இங்கு மனிதத்தை மட்டுமே விதைக்க விரும்புகிறேன். மதங்கள், சமயங்கள், போன்றவற்றை இறைவனை அடைக்கப் பயன்படுத்தப்படும் தங்கக்கூண்டுகளாகவே நான் கருதுகிறேன். இறைவன் ஒருவனும் பலவும், சிறிதும் பெரிதும், என அனைத்துமாய் இருக்கிறான். அவனை சமயங்கள் எனும் கூண்டில் அடைத்து மனிதன் வேடிக்கை பார்க்கிறான். ஆனால், மதங்கள், சாதிகள், சமயங்கள் மூலம் மனிதனை வகைப்படுத்த முடியுமே ஒழிய மனிதத்தை வகைப்படுத்த முடியாது. ஏனென்றால், மனிதமும் இறைவனும், மிகப்பெரியனவும், ஒன்றோடொன்று இழைந்ததும் ஆகும். மனிதத்தையும், இறைவனையும் எந்த மதத்தாலும், சாதியாலும், சமயத்தாலும் அடக்கிவிடவே முடியாது. சில சமயங்கள் மற்றும் மதங்களின் பேரில் அசைவம் உட்கொள்வது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று வாதங்கள் எழுவதுண்டு. அவற்றுள் முக்கியமான ஒன்று இஸ்லாமிய வாதங்கள். ஆனால், உண்மையில் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பல இஸ்லாமியர்கள் அறியாமல் இருப்பது நன்றன்று. எனவே, இஸ்லாமிய சமயம் மிருகங்களை உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் பலியிடப்படுவது குறித்து சொல்லும் நெறிகளை கூடிய விரைவில் இங்கே பதிவு செய்கிறேன். கற்றுணருங்கள் இஸ்லாமியத்தோழர்களே!

ALLAH MALIQ!!!